Monday, August 11, 2008

போதும் எனக்கு...

சடசடவென ஆரம்பித்து
சட்டென நிற்கும் மழைக்குபின்
செம்மண் கொடுக்கும்
வாசத்திற்குநிகரான சுகந்தம்
வேறெதுவும்தருவதில்லை
-------------------------------------------------------------
ஒரே நாள் பிஸ்கட் உண்ட
பெட்டிகடை நாய்குட்டி
என் கைநக்கும் ஈரம் தரும்
மகிழ்ச்சியை போல்
வேறெதுவும் தந்ததில்லை
--------------------------------------------------------------
நீ எனை கை விட்ட
அந்த பனி இரவின்
அடர்த்தி போல்
நீளம் போல்
வேறெதுவும் இருந்ததில்லை

அந்த கடுன்குளிருக்கான
வெப்பத்தை என் செல்லநாயின்
கண்ணீர்போல்
எந்த கம்பளியின் கதகதப்பும்
தேநீரின் சூடும் தந்ததில்லை.
----------------------------------------------
ஓர் இறுகிய கணத்தைஇதமாக்க,
குளிர்ந்த தென்றலும்
சிறு மலரும்
போதாமல் இருந்ததில்லை.
ஜனா கே