Monday, January 20, 2014

இரண்டு கவிதைகள்

கதவுகளில் வாழ்ந்த பறவைகள்

சாத்தப்பட்ட கதவுகளின் முன் நிற்கும்போதெல்லாம்

உள்ளிருந்து ஒலிக்கிறது கீகீ என்ற பறவையின் குரல்
ஆனாலும் கதவுகளால் தான் வாழ்கின்றன
எலெகட்ரானிக் பறவைகள்
கதவுகளில் வாழ்ந்த பறவைகள்
பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை

நிர்வாணம்

நிர்வாணம் பற்றி பேசுபவளை  ஒருவனுக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றி பேசுபவனை ஒருத்திக்கும் பிடிப்பதில்லை
நிர்வாணம் பற்றியே பேசும் இருவர் சேர்ந்து இருப்பதில்லை
இங்கு நிர்வாணம் பற்றி யாருக்குமே தெளிவில்லை



உயிரோசையில் வெளியானது: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2530

No comments: