Monday, January 20, 2014

விகடனில் வெளியான கவிதைகள் -2

மீதமிருக்கும் உயிர்


பள்ளிவிட்டுச்செல்லும் சிறுமி
மதிலோர வேம்புத்தளிர்மேல்
ஊற்றிச்செல்லும்
புட்டித் தண்ணீரின் மீதத்தில்
உயிர்வாழ்கிறது உலகம்

இனிய இரவில் சில வருத்தங்கள்

அதிவேக பேருந்தின்
முன்னால் பறந்து சென்ற
சொற்கள் எல்லாம் உள்வந்து
விழுந்தன,
‘மெசேஜ் சென்டிங் பெயில்டு’
காலையில் கூட்டும்போது
செத்துக்கிடந்தன இனிய இரவுகளும்
சில முத்தங்களும்.
துடித்துக்கொண்டிருந்தன

சில வருத்தங்கள் மட்டும்.

No comments: